/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
/
கூடுதல் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 11, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலையிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்தாலுகாவிலுள்ள பல கிராமங்களுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கானோர் டவுன்பஸ்களில் செல்கின்றனர்.
ஆனால், பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவில் டவுன்பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், அக்கிராமங்களைச்சேர்ந்தவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.
இதில், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

