sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் விலை ரூ. 4 உயர்வு

/

இளநீர் விலை ரூ. 4 உயர்வு

இளநீர் விலை ரூ. 4 உயர்வு

இளநீர் விலை ரூ. 4 உயர்வு


ADDED : மார் 02, 2025 11:43 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டு, 40 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 15,500 ரூபாய்.

இளநீர் வரத்து தேவையைக் காட்டிலும் மிகவும் குறைந்து காணப்படுவதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இளநீரின் எடை குறைவாக இருப்பதன் காரணமாக குறைந்தபட்சம் 37 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டும். இளநீரின் விலை தொடர்ந்து கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் நிதானமாக நல்ல விலையை கேட்டு பெற வேண்டும். கர்நாடக மாநிலம் மத்துார் சந்தை மற்றும் கே.ஆர்., பேட் சந்தைகளில் வரத்தும் தரமும் குறைந்து காணப்படுகிறது.

இந்த சந்தைகளில் கடந்த வாரம், பொள்ளாச்சி பகுதியை விட கூடுதல் விலைக்கு இளநீர் விற்பனையாகியுள்ளது. இப்பகுதிகளில், இனி வரக்கூடிய நாட்களில், இளநீர் வரத்து மேலும் கணிசமாக குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us