sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு

/

வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு

வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு

வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு


ADDED : மார் 04, 2025 07:09 PM

Google News

ADDED : மார் 04, 2025 07:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு, வடபுதூர் பகுதியில் ஒன்றரை மாதமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாதத்திற்கு இரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, வடபுதூரின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் குடிநீர் இல்லாமல் மக்கள் பலர், இரவு பகல் பார்க்காமல் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள இடத்தில் 'லீக்கேஜ்' தண்ணீர் வரும் பகுதியில் குடிநீர் பிடித்து செல்கின்றனர். சிலர், பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.

மக்கள் கூறுகையில், 'கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குடிநீர் தேவை அதிகமாக இருக்கும். தற்போது நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால், பெரும் சிரமம் ஏற்படுகிறது.

வீட்டில் குடிநீர் தேவை அதிகம் உள்ளதால், வெளியில் சென்று தண்ணீர் எடுத்து வரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் பிரச்னை சரி செய்ய குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us