sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

/

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்


ADDED : ஜூலை 25, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வசிக்கும் வீட்டை, சுரேஷ் விற்க முயற்சி செய்ததை அறிந்த சத்தியவாணி, சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனுவை கடந்த, 9ம் தேதி அளித்தார்.

ஆனால், சப்-ரிஜிஸ்டர் அந்த மனுவை விசாரிக்காமல், சுரேஷ்க்கு சாதகமாக கடந்த, 12ம் தேதி வேறு ஒரு நபருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்ததை அறிந்த சத்தியவாணி, இரு குழந்தைகளுடன் சப் -ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சப்-ரிஜிஸ்டர் செல்வக்குமார் பேச்சு நடத்திய போது, கிரயம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என சத்யவாணி வலியுறுத்தினார். இதையடுத்து, சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வர சொல்லி சப் - ரிஜிஸ்டர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும், என சப் - ரிஜிஸ்டர் தெரிவித்ததையடுத்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us