sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்

/

'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்

'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்

'புரோக்கர்களுக்கு மட்டும் 10 நாளில் வேலை நடக்குது' மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரம்


ADDED : ஆக 29, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது; மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில் குமரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

சாந்தி, பணிகள் குழு தலைவர்: 63வது வார்டு முருகன் நகர், கன்னிகா பரமேஸ்வரி நகரில் கழிவு நீர் தேங்குகிறது. எட்டு மாதமாக சொல்லி வருகிறேன். சாக்கடை கால்வாய் துார்வாரப்படவில்லை.

பாதாள சாக்கடை அடைப்பு நீக்க வண்டி வருவதேயில்லை. ராமலிங்கம் நகர், ஜோதி நகரில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் கழிவு நீர் பொங்குகிறது.

மனோகரன், 81வது வார்டு: நிலைக்குழு தலைவர் சொல்லும் கோரிக்கையை கூட செய்து தரவில்லை. அடுத்த கூட்டத்தை கமிஷனர் தலைமையில் நடத்துங்கள். இல்லையெனில், கூட்டம் நடத்தாதீர்கள்.

அன்னக்கொடி, 49வது வார்டு: மலைபோல் குப்பை தேங்கியிருக்கு. 21 வண்டி கொடுத்தாங்க. இப்ப, அஞ்சுதான் ஓடுது. மற்ற வண்டிகள் மாயமாகி விட்டன. சுகாதாரப் பணியை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்; நாங்களே பார்த்துக் கொள்கிறோம். பொதுமக்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறோம்.

தண்ணீர் ஆபரேட்டர் லீவு போட்டால், சப்ளை செய்வதற்கு ஆளில்லை; பொதுமக்கள் சாலை மறியல் செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்கே போனாலும் அவமானமா இருக்கு. குப்பை அள்ள டாடா ஏஸ் வாகனம் வேண்டாம்; தள்ளுவண்டியே போதும்.

ஷர்மிளா, 70வது வார்டு:சின்ன சின்ன வேலைகள் கூட நடக்காமல் இருப்பதால் கேட்கிறோம். கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய தயாராக இருக்கிறோம். எனது வார்டுக்கு, 22 குப்பை வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டுக்குள் சின்ன சின்ன வீதிகளே இருக்கின்றன. பெரிய வண்டி செல்ல முடியாது; 10 வண்டிகளே மாற்றித் தரப்பட்டுள்ளன. மற்ற வண்டிகளையும் மாற்றித் தர வேண்டும். 90 துாய்மை பணியாளர்களில், 27 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

அவ்விடத்துக்கு தற்காலிக ஊழியர்களோ அல்லது ஒப்பந்த ஊழியர்களோ நியமிக்க வேண்டும். இப்போது, 49 பேரே பணிபுரிகின்றனர். குப்பை வண்டிக்கு, 88 டப்பா தேவை.

கிருஷ்ணசாமி ரோட்டில், நான்கு மாதங்களுக்கு முன் புதிதாக ரோடு போடப்பட்டது; இரு பக்கமும் குழிகள் உருவாகி விட்டன; நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களுக்குள் குழி வந்து விட்டது; அந்தளவுக்குதான் ரோடு தரமாக போடப்படுகிறதா.

அலிமா பேகம், 84வது வார்டு: பாதாள சாக்கடை சேம்பர் நிரம்பி வழிகிறது. அடைப்பு நீக்க வண்டி கேட்டால், ரிப்பேர் என சொல்கிறார்கள். கழிவு நீர் பொங்கி, வீட்டுக்குள் வருகிறது. குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக, மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

கவுன்சிலர்கள் பேசி முடித்ததும், 26 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்' முறையில் ஒரே நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டன.

பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னை ஏற்படுகிறது. அடைப்பு ஏற்படும் இடங்களில் நீக்கப்படுகிறது. புதிய குழாய் பதிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் நிதி பெற வேண்டும்.

- மீனா

மத்திய மண்டல தலைவர்

'அரசாணையும் மாறி விடுமா'

கவுன்சிலர் பிரபாகரன் கூறுகையில், ''சி சான்ஷன் தீர்மானங்கள் மண்டல கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, மாமன்ற கூட்டத்தின் பார்வைக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். இது தான் நடைமுறை. கமிஷனராக பிரதாப் இருந்தவரை இந்நடைமுறை இருந்தது. கமிஷனர் மாறி விட்டால், அரசாணையும் மாறிவிடுமா. மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மூன்று மாதமாகி விடும்; அதுவரை வேலை செய்யாமல் இருப்பீர்களா. வார்டுக்குள் கவுன்சிலர்களுக்கு மரியாதை இருந்தது; அதுவும் போய் விடும் போலிருக்கே,'' என்றார்.



வார்த்தைக்கு மதிப்பில்லை

முபஷீரா, வரி விதிப்பு குழு தலைவர் பேசுகையில், ''குப்பை பிரச்னையை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தள்ளுவண்டி இல்லை; 'பக்கெட்' இல்லை; முறம் இல்லை. வரி விதிப்புக்குழுவுக்கு சேர்மனாக இருக்கிறேன். வரி விதிப்பு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்தால், செய்து தருவதில்லை. ஒரு கவுன்சிலர் விண்ணப்பம் கொடுத்தார்; செய்து தர வாய்ப்பில்லை என திருப்பிக் கொடுத்து விட்டனர். அதே விண்ணப்பத்தை புரோக்கர் மூலமாக கொடுத்ததும், 10 நாளில் வரி விதிப்பு செய்து கொடுத்து விட்டீர்கள். எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. மத்திய மண்டலத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை. 20 வார்டுக்கும் மண்டல தலைவரே பொறுப்பு; மண்டல தலைவர் சொன்னாலே அதிகாரிகள் கேட்பதில்லை,'' என்றார்.



பட்டியல் தயாராகிறது: உதவி கமிஷனர்

உதவி கமிஷனர் செந்தில்குமரன் பேசுகையில், ''கவுன்சிலர்கள் கூறும் குறைகளை எங்களால் முடிந்தவரை நிறைவேற்றித் தருகிறோம். சில பணிகளை, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றே செய்ய முடியும்; பொறுமையாக இருக்க வேண்டும். ஏதேனும் பணிகள் செய்யாமல் இருந்தால், அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக, மீண்டும் சர்வே எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டிலும் எத்தனை வீடுகள், கடைகள் இருக்கின்றன என கணக்கிட்டு, பட்டியல் கோரப்பட்டுள்ளது. விரைவில் லிஸ்ட் கொடுக்கப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us