sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 48 வகையான மலர்களால் வழிபாடு

/

பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 48 வகையான மலர்களால் வழிபாடு

பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 48 வகையான மலர்களால் வழிபாடு

பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 48 வகையான மலர்களால் வழிபாடு


ADDED : மே 01, 2024 11:42 PM

Google News

ADDED : மே 01, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் வழிபாடு நடந்தது.

பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பேரூர் பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நடத்தப்படும். அவகையில் இந்த ஆண்டு சித்திரை மாத மலர் வழிபாடு நேற்று நடந்தது.

பேரூரில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் மடத்தில், பூக்களுக்கு பூஜை செய்து, கைலாய வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக பூக்களை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர்.

தாமரை, மல்லி, முல்லை, பாரிஜாதம், நாகலிங்கம், வில்வ இலை, அரளி, செண்டுமல்லி, சாமந்தி, செவ்வந்தி, வெள்ளருக்கம், மனோரஞ்சிதம், பன்னீர் ரோஜா என, 48 வகையான, சுமார், 450 கிலோ பூக்களை கொண்டு, பேரூர் பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us