/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை
/
100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை
100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை
100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை
ADDED : பிப் 11, 2026 05:40 AM
காரமடை: கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினந்தோறும் 300 ரூபாய் என்ற அடிப்படையில் வேலை செய்கின்றனர்.
காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் மரக்கன்று நடுதல், குளம்,குட்டை,தூர்வாருதல் விவசாய நிலங்களில் பணி புரிதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்ட மகளிருக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என பணி செய்தவர்கள் கூறினர். ஊராட்சியில் உள்ள மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பெயர் மாற்றப்பட்டது. அது தொடர்பான நிர்வாக பணிகள் இருப்பதால் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணம் வரவில்லை. இது விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.
இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

