/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடை செய்யப்பட்ட 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 08, 2025 11:13 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, விற்பனைக்காக வைத்து இருந்த, 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
கிணத்துக்கடவு எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, சிவசக்தி மளிகை கடை அருகே சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கிணத்துக்கடவைச்சேர்ந்த ஜோதி பொன்னுலிங்கம், 35, என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருப்பதும்; கிணத்துக்கடவு கல்லங்காட்டுபுதுார் சதீஷ்குமார், 38 என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜோதி பொன்னுலிங்கத்தை கைது செய்து போலீசார், 52 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.