/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முகாமில் 58 பேருக்கு வேலை கிடைச்சாச்சு
/
முகாமில் 58 பேருக்கு வேலை கிடைச்சாச்சு
ADDED : செப் 19, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, செப்., மாத சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்களில்,ஆண்கள் - 186, பெண்கள் -- 166 என மொத்தம் 352 பேர் பங்கேற்றனர். 50 நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், 58 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 101 பேர் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.