sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை

/

மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை

மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை

மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை


ADDED : மே 27, 2025 10:23 PM

Google News

ADDED : மே 27, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, வேளாண் துறை எச்சரித்துள்ளது.

கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:

கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்காக, யூரியா, டி.ஏ.பி., பொட்டாசியம், காம்பளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 11,429 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை, தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், 7 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்கக் கூடாது.

உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, கொள்முதல் செய்யவோ கூடாது. அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்கக் கூடாது. கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது.

விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்கக் கூடாது. அனைத்துக்கும் முறையான அனுமதி தேவை.

உர இருப்பு, விலை விவர பலகையை விவசாயிகள் பார்வையில் படும்வகையில் பராமரிக்க வேண்டும். தரமற்ற உரம் விற்பனை செய்யக்கூடாது.

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us