/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
77வது குடியரசு தின விழா கோலாகலம்
/
77வது குடியரசு தின விழா கோலாகலம்
ADDED : ஜன 27, 2026 05:12 AM

கோவை: 77-வது குடியரசு தின விழா வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சமாதானத்தை போற்றும் வகையில் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
313 சான்றிதழ்கள் நிர்வாகம் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.காவல்துறையினர் 122 பேர், வருவாய்த் துறையினர் 34 பேர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் 30 பேர், இதர துறைகளை சேர்ந்த அலுவலர்கள் 127 பேர் என மொத்தம் 313 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சுதந்திர போராட்டம் மற்றும் மொழிப் போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கும் கலெக்டர் மரியாதை செலுத்தினார்.
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயன்று உயிர்நீத்த, மத்திய அரசின் 'பால் புரஸ்கார்' விருது பெற்ற சிறுமி வியோமா பிரியாவின் பெற்றோரும் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 'பேக்' பரிசாக வழங்கப்பட்டது.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

