sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்

/

நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்

நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்

நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்


ADDED : டிச 19, 2024 11:56 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, பல்வேறு நோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறலாம்,' என்கின்றனர், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக்.

மேலும் அவர்கள் கூறியதாவது:

முழு உடல் பரிசோதனை என்பது, உடலில் நோய் தாக்குவதற்கான அறிகுறிகள், என்ன நோய் தாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதாகும்.

உடல் உழைப்பின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளோர், நோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னை, அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை, குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் வந்திருந்தால் அவர்களின் வாரிசுகள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இப்பரிசோதனையால், தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து உரிய சிகிச்சையை உடனடியாக பெறலாம். இப்பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு, அன்றே பரிசோதனை அறிக்கையையும் பெற்றுக்கொள்ளலாம்.

சிறுநீர், ரத்தம், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் கே.எம்.சி.எச்.,ல் மேற்கொள்ளப்படுகின்றன.

ரத்த சோகை, ரத்த புற்றுநோய், நீரிழிவு, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, இதயத்தின் இயங்கும் தன்மை, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல், மார்பக புற்றுநோயை கண்டறியலாம்.

கே.எம்.சி.எச்.,ல் முழு உடல் பரிசோதனை செய்ய விரும்புவோர், 97901 97971 என்ற மொபைல் போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர மற்று அனைத்து நாட்களிலும் பரிசோதனை செய்யப்படும்.

தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பொருத்தமான பிரத்யேக முழு உடல் பரிசோதனை திட்டங்களும் இங்கு உள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us