sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்

/

காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்

காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்

காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்


ADDED : மார் 06, 2024 01:25 AM

Google News

ADDED : மார் 06, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:ஆறுமுககவுண்டனூரில், காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் வெளியேறி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் இரவு, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ரேக்கன்டோ வனப்பகுதியில் இருந்து, 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வெளியேறியுள்ளது.

அதில், 3 காட்டு யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, ஆறுமுகக்கவுண்டனூர், கங்கா நகர் செல்லும் வழியில் சென்றுள்ளன.

அப்போது, அங்குள்ள கருப்பராயன் கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த சுமார், 60 வயதுள்ள மூதாட்டியை, காட்டு யானை தாக்கியுள்ளது.

இதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து மதுக்கரை வனத்துறையினர், பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி, கடந்த 6 மாதங்களாக, கருப்பராயன் கோவில் தங்கி, அருகில் உள்ளவர்களிடம் உணவு வாங்கி உண்டு வந்தது தெரியவந்தது.

அவரின் பெயர், ஊர் என அவரை பற்றி விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.






      Dinamalar
      Follow us