/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'
/
'மகளிர் பூங்கா அமைக்கப்படும்'
ADDED : பிப் 17, 2026 06:43 AM
'கல்வியே வலுவான அடித்தளம்' மாணவர்கள் தரமான கல்வி பெறும் வகையில் கூடுதல் வகுப்பறை, விளையாட்டு உட்கட்மைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, போட்டித் தேர்வுக்கான பயிற்சி, நுாலக வசதி ஏற்படுத்தப்படும். பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பூங்காக்கள் உருவாக்கப்படும். மரக்கன்றுகள் நடப்படும். - ரங்கநாயகி, மேயர்.
'நிரந்தர பணியாளர் நியமிங்க' திட்டச்சாலைகள் உருவாக்கவே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அறிவித்து நிதி ஒதுக்கப்படும். இந்தாண்டு அறிவிக்கவே இல்லை. ஒப்பந்த முறையை கைவிட்டு, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பொதுக்கழிப்பிடம் பராமரிக்கும் பணியை மாநகராட்சியே செய்ய வேண்டும். - சாந்தி, இ.கம்யூ. குழு தலைவர்.
'ஒரு கோடி ரூபாய் ஒதுக்குங்க' அறிவித்துள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; ஒவ்வொன்றுக்கும் கால நிர்ணயம் செய்ய வேண்டும். வார்டு நிதியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். சுகாதார நிலையங்கள் கட்ட வேண்டும். சத்தி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். - ராமமூர்த்தி, மா.கம்யூ. குழு தலைவர்.
'பூங்காவுக்கு முக்கியத்துவம் தாங்க' மாநகராட்சி பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைப்பது வரவேற்கக் கூடியது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் அனைத்து பள்ளிகளிலும் நிறுவ வேண்டும். செம்மொழி பூங்காவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, 100 வார்டுகளில் உள்ள பூங்காக்களுக்கும் அளிக்க வேண்டும். - அழகு ஜெயபாலன், காங்கிரஸ் குழு தலைவர்.
'வளர்ச்சிக்கான பட்ஜெட்' கோவை மக்களுக்கு முற்போக்கு சிந்தனையுடன், நகர வளர்ச்சிக்கேற்ப தாக்கல் செய்துள்ள பட்ஜெட். கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நகர மேம்பாடு, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. - கார்த்திகேயன், தி.மு.க. குழு தலைவர்.
'மேம்பட்ட பசுமை நகரமாகும்' ரூ.123 கோடியில் 289 கி.மீ. நீளத்துக்கு 2,112 சாலைகள் மேம்படுத்தப்படும். 150 இடங்களில் மரக்கன்று நடப்படும். மகளிருக்கு பிங்க் பூங்கா அமைக்கப்படும். 6 இடங்களில் வாரச்சந்தை மேம்படுத்தப்படும். மேம்பட்ட பசுமை நகரமாக மாற்றும் திட்டங்கள் செயல் படுத்தப்படும். - சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி கமிஷனர்.

