/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளிடம் 'கறார்' காட்டினால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும்
/
மாற்றுத்திறனாளிகளிடம் 'கறார்' காட்டினால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும்
மாற்றுத்திறனாளிகளிடம் 'கறார்' காட்டினால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும்
மாற்றுத்திறனாளிகளிடம் 'கறார்' காட்டினால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும்
ADDED : மார் 01, 2024 07:36 AM

'மாற்றுத்திறனாளிகளிடம் 'கறார்' காட்டும் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை பாயும்' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கோவை கோட்ட நிர்வாகம் சார்பில், அதன் கிளை மேலாளர்கள் வாயிலாக டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
போக்குவரத்து கழகங்களால் வழங்கப்பட்ட பயணஅட்டைப்படி, பார்வையற்றோரை, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் நகர, புறநகர பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டையுடன், 40 சதவீதத்துக்குமேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களை, உதவியாளர் ஒருவரையும் சேர்த்து சாதாரண கட்டண பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். புறநகர் பஸ்களில், 75 சதவீத கட்டண சலுகையில் அனுமதிக்க வேண்டும். புற்றுநோயாளிகள், அவர் உதவியாளருக்கு மருத்துவமனை சான்றிதழ் அடிப்படையில், நோயாளிக்கு கால் பங்கு கட்டணம், உதவியாளரை சேர்த்து, ஒரு டிக்கெட்டுக்கு மட்டும் பணம் பெற வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் மற்றும் நிறுத்தங்களில் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் ஏற்றிச்செல்ல வேண்டும். நிறுத்ததுக்கு முன்போ, பின்போ பஸ்சை நிறுத்தி கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது. மாற்றுத்திறனாளிகளிடம் கோபமாக, இழிவாக, ஏளனமாக பேசாமல், அன்புடன் நடக்க வேண்டும். இதை கடைப்பிடிக்காத நிலையில், புகார் வந்தால் கண்டக்டர், டிரைவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி சேலம், மதுரை, நெல்லை, விழுப்புரம், கும்பகோணம், சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- நமது நிருபர் -

