/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோயிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
/
மருதமலை கோயிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
ADDED : நவ 17, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடிகர் சந்தானம், சுவாமி தரிசனம் செய்தார்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பிரபல நடிகரான சந்தானம், நேற்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, சுவாமி தரிசனம் செய்ய வந்தார். மூலவர், பட்டீஸ்வரர், மரகதாம்பிகை ஆகிய சன்னதிகளில், சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டு சென்றார்.

