ADDED : பிப் 11, 2026 05:17 AM

கோவை: ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளியின் மூன்றாம் ஆண்டுவிழா, ' சரியான நேரம், வலிமையான மனம், வரம்பற்ற சாத்தியங்கள்' என்ற மையக்கருவில் நடந்தது.
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் 582வது தரவரிசை பெற்று திருவனந்தபுரம் இந்திய விண்வெளி தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்த மாணவன் மிதுன்கண்ணா கவுரவிக்கப்பட்டார். இதேபோல், கடந்தாண்டு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் கலை, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
கலைத்துறை இயக்குனர் ராஜமாணிக்கம் ஒருங்கிணைப்பில் ஆடல், பாடல், நாடகம் மற்றும் இசைக்கருவிகள் வாசித்தால் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர். ஆதித்யா குழும பள்ளிகளின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக், ஸ்ரீ வித்யநாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி, பள்ளி முதல்வர் சிவக்கொழுந்து மற்றும் ஆசிரயர்கள், பெற்றோர் கள் கலந்துகொண்டனர்.

