தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலை.யில் திறன் மேம்பாடு பயிற்சி

வேளாண் பல்கலை.யில் திறன் மேம்பாடு பயிற்சி

வேளாண் பல்கலை.யில் திறன் மேம்பாடு பயிற்சி


ADDED : ஆக 20, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி, ஆக. 21 – வேளாண் பல்கலை திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி நடக்கிறது.

துணைவேந்தர்  சுப்ரமணியன் துவக்கி வைத்தார். ‘‘வகுப்பறையில் ஆசிரியர்கள் வழங்கும் அறிவு, மாணவர்களின் செயல்திறனாகவும், சமூகப் பயன்பாட்டுக்கான செயலாகவும் மாற வேண்டும். அப்போதுதான் மாணவர்களிடமும் சமூகத்திடமும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும். அறிவு சார்ந்த கல்வியிலிருந்து ஞானம் சார்ந்த கல்வியை நோக்கி நகர்வதற்கு, ஆசிரியர்கள் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வது அவசியம்” என அவர் வலியுறுத்தினார்.

முதுநிலை கல்வி டீன் பாபு சிறப்புரையில், ‘‘ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, நமது சிந்தனைத் திறனை சுருக்காமல், அதை மேலும் விரிவுபடுத்தும் கருவியாக அமைய வேண்டும்’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us