/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2026 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாடாபாத் பவர்ஹவுஸ் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005ன் பெயரை மாற்றக்கூடாது, நிதி பங்களிப்பு 90 - 10 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், வேலைக்கான நிதி, ரூ.205 லட்சம் கோடியை வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்டச் செயலாளர் பத்மநாபன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

