sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு  உதவும் செயலி விரைவில் அறிமுகம் 

/

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு  உதவும் செயலி விரைவில் அறிமுகம் 

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு  உதவும் செயலி விரைவில் அறிமுகம் 

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு  உதவும் செயலி விரைவில் அறிமுகம் 


ADDED : பிப் 04, 2024 02:27 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், பயிர் ரகங்களுக்கு ஏற்ப காலநிலை முன்னறிவிப்பு வழங்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, பிரத்யேக செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

வேளாண் பல்கலை சார்பில், வாரந்தோறும் இரண்டு முறை காலநிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்.

இதில், கடந்த வாரம் மற்றும் எதிர்வரும் வாரத்திற்கான வெப்பநிலை, மழை வாய்ப்பு, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.

ஆனால், பொதுவானதாக இருப்பதால், விவசாயிகளின் பயிர் ரகங்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட ஆலோசனை கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன.

இந்நிலையில், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து பயிர்கள் சார்ந்த டேட்டாக்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:

கிராமங்கள் அளவில், விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு ஏற்ப பிரத்யேக காலநிலை முன்னறிவிப்பு தகவல் அளிக்கப்படும். ஒரு மொபைல் எண்ணில் இருந்து, ஒரு பயிருக்கு மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியும்.

விவசாயிகள் தங்கள் மொபைல் எண், பயிர், பயிரின் ரகம், விதைப்பு நேரம் நாள் போன்ற தகவல்களை கொடுத்து, பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிர்களுக்கு ஏற்றவாறு முன்னறிவிப்பு, வாரம் இருமுறை அனுப்ப இயலும்.

பெரிய அளவில் காலநிலை பாதிப்புகள் இருந்தாலும், தானியங்கி தொழில்நுட்ப முறையில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நடப்பாண்டில், 8 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்படவுள்ளனர். தற்போது வரை, ஒரு லட்சம் விவசாயிகள் இணைந்து, ஆய்வு முறையில் காலநிலை முன்னறிவிப்பு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us