/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை டென்னிஸ் போட்டி: இறுதி போட்டிக்கு இரு அணிகள் தகுதி
/
அண்ணா பல்கலை டென்னிஸ் போட்டி: இறுதி போட்டிக்கு இரு அணிகள் தகுதி
அண்ணா பல்கலை டென்னிஸ் போட்டி: இறுதி போட்டிக்கு இரு அணிகள் தகுதி
அண்ணா பல்கலை டென்னிஸ் போட்டி: இறுதி போட்டிக்கு இரு அணிகள் தகுதி
ADDED : அக் 03, 2024 08:17 PM
கோவை:
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே டென்னிஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., டெக்., அணியும், சி.ஐ.டி., கல்லுாரி அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
அவிநாசி ரோடு, கோயம்புத்துார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(சி.ஐ.டி.,) மைதானத்தில் அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(9வது மண்டலம்) பால்பேட்மின்டன், கூடைப்பந்து, டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் துவங்கின. இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், ஐந்து அணிகள் பங்கேற்றன.
முதல் போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 23-6 என்ற புள்ளிக் கணக்கில் பி.எஸ்.ஜி., ஐ.ஏ.பி., அணியை வென்றது. தொடர்ந்து, பி.எஸ்.ஜி., டெக்., அணி, 30-16 என்ற புள்ளிக் கணக்கில் பி.எஸ்.ஜி., ஐ டெக்., அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 27-14 என்ற புள்ளிக் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியையும் வென்றன.
பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 44-26 என்ற புள்ளிக் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் பி.எஸ்.ஜி., டெக்., அணி, 41-37 என்ற புள்ளிக் கணக்கில் பி.எஸ்.ஜி., ஐ டெக்., அணியையும் வென்றன.
இறுதிப்போட்டியில், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 46-28 என்ற புள்ளிக் கணக்கில் பி.எஸ்.ஜி., டெக்., அணியை வென்று முதலிடத்தை பிடித்தது. பி.எஸ்.ஜி., ஐ டெக்., அணி, 38-26 என்ற புள்ளிக் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பெற்றது.
அதேபோல், ஆண்கள் டென்னிஸ் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து, முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி., டெக்., அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
இரண்டாம் அரையிறுதியில் சி.ஐ.டி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்றது.