/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை
/
கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை
ADDED : நவ 03, 2025 09:45 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபி ேஷக பூஜை நாளை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை சுவாமி அன்னாபி ேஷக அலங்காரத்திலும், 11:30 மணிக்கு அன்னா பிேஷக அலங்காரம் கலைக்கப்பட்டு, 12:00 மணிக்கு மஹா அபிேஷகமும் நடக்கிறது.
மதியம், 12:30 மணிக்கு அலங்கார பூஜை, 1:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பூஜைக்கு தேவையான பொருட்கள் அல்லது நிதியை இன்று மதியத்துக்குள் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
*ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷக விழா நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மஹா அபிேஷகம், அன்னாபிேஷகம், ஆராதனை நடக்கிறது.
* தேவம்பாடிவலசு கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரர் கோவிலில், அன்னாபி ேஷக விழாவையொட்டி, காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை ருத்ர ேஹாமம், 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை அம்மணீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடக்கிறது.மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை அன்னாபிேஷக அலங்காரம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

