ADDED : மார் 11, 2024 08:57 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், கல்லுாரித் தலைவர் சேதுபதி தலைமையில் ஆண்டு விழா நடந்தது.
பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா பேசுகையில், 'இளைய சமுதாயத்தினரே எதிர்கால இந்தியாவின் மூலதனம், மாணவர்கள் புதிய சிந்தனைகளை விதைத்து, வாழ்வின் உச்சம் தொட வேண்டும்,' என்றார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன் பங்கேற்றனர்.
