sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

/

ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் ஒருவர் கைது


ADDED : நவ 03, 2025 02:35 AM

Google News

ADDED : நவ 03, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: தேனி, கம்பத்தை சேர்ந்தவர் விஜய், 28. இவரும், இவரது உறவினருமான பாண்டீஸ்வரனும்,33 இணைந்து, பழைய தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

விஜயிடம், அவரது சிறை நண்பரான மதுரையை சேர்ந்த தர்மா, கோவையில் ஒருவரிடம், 100 பவுன் தங்க நகை உள்ளதாகவும், அதை, 50 லட்சம் ரூபாய்க்கு பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி, விஜயும், பாண்டீஸ்வரனும், அக்., 18ம் தேதி, கோவைக்கு வந்தபோது, தர்மா, விஜயை, நகை வாங்க செல்வதாகக்கூறி, மதுக்கரை நோக்கி காரில், அழைத்துச் சென்று, அங்கு, 50 லட்சம் ரூபாயை மிரட்டி கொள்ளையடித்துவிட்டு, கூட்டாளிகளுடன் தப்பி சென்றார்.

விஜய் அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, தர்மா, வெங்கட்பிரபு உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இக்கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்த விருதுநகரை சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவன் கார்த்திக்,25 என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us