/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்
/
நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 21, 2025 10:55 PM
கோவை; கோவை மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவிக்கு, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில், ஒரு மாற்றுத்திறனாளியை, நியமன கவுன்சிலராக நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் விண்ணப்பம் பெறப்பட்டது. 17ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 16 பெண்கள், 47 ஆண்கள் என, 63 பேர் விண்ணப்பம் கொடுத்தனர்.
பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்ததால், 31ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை விண்ணப்பம் வழங்க அவகாசத்தை நீட்டித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.