/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு
/
மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு
ADDED : நவ 27, 2025 05:21 AM

மேட்டுப்பாளையம்: காரமடை நகராட்சியில், மாற்றுத்திறனாளி புஷ்பலதா நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு, நேற்று பதவியேற்று கொண்டார்.
உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, காரமடை நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் குட்டையூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி புஷ்பலதா, 51 தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று காரமடை நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
கமிஷனர் மதுமதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ் வழங்கினார்.
புஷ்பலதா பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் வீட்டோடு இருந்தார்கள்.
இப்போது இந்த பதவி எங்களை போன்றவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் முடிந்த அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுப்பேன், என்றார்.
இந்நிகழ்ச்சியில், காரமடை நகராட்சி தலைவர் உஷா மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

