/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரபிக் கல்லுாரி முப்பெரும் விழா
/
அரபிக் கல்லுாரி முப்பெரும் விழா
ADDED : பிப் 17, 2026 05:34 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் மதரஸா மழ்ஹருல் ஹூதா அரபிக் கல்லுாரி சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில், சிறப்பு மார்க்க சொற்பொழிவுகள், மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளி வாசலில் பணியாற்றும் இமாம்கள், மு அத்தின்கள், மார்க்க அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அதில், மாணவர்களின் மும்மொழி இதழ் சிறப்பு புத்தகத்தை கல்லுாரி மாணவர்கள் வெளியிட்டனர். அல்ஹாஜ் காஜா மைதீன் சாஹிப் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மவுலவி ஸப்அகாரி, அல்ஹாஜ் முஹம்மது முஹ்யித்தின் தொகுத்து வழங்கினார்.
ஆலிம் பெருமக்கள், மு அத்தின்களை, மவுலானா, மவுலவி, அல்ஹாஜ், ராஷிதுல்உலமா, முஹம்மது அலி, கோவை மன்பவுல் உலுாம் அரபிக் கல்லுாரி முதல்வர் இம்தாதி ஹழ்ரத் வாழ்த்தி கவுரவித்தார். அதில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைவர், செயலாளர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

