/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்
/
துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்
ADDED : செப் 17, 2025 09:51 PM
பெ.நா.பாளையம் ; துடியலூரில் அரவான் பண்டிகை இம்மாதம், 22ம் தேதி துவங்குகிறது.
அன்று காலை, 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 23ம் தேதி மாலை, 4:30 மணிக்கு பொங்காளியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல் நடக்கிறது.
7:00 மணிக்கு தலைவர் வேலுசாமி இல்லத்தில் பூஜை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மங்கையம்மன் பூச்சாட்டுதல், 9:00 மணிக்கு பூசாரி ரங்கசாமி இல்லத்தில் அணி கூடை பூஜை, இரவு, 10:00 மணிக்கு அரவான் சுவாமிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது.
தொடர்ந்து, 30ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் அக்., 1ம் தேதி மங்கையம்மன் பொங்கல் திருவிழா, 7ம் தேதி அரவான் மலைக்கு செல்லுதல், 8ம் தேதி அரவான் சுவாமியை எதிர்கொண்டு அழைத்தல், நடக்கிறது.
9ம் தேதி காலை மஞ்சள் நீராடுதல், இரவு 9:00 மணிக்கு அரவான் சுவாமியை ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டுபிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
10ம் தேதி காலை அரவான் அலங்கார பூஜை, அரவான் திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு பொங்காளியம்மன் கட்டு சாதம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அரவான் களப்பலி மேடை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
11ம் தேதி பொங்காளி அம்மன் கோவிலில் இருந்து இரவு ஸ்ரீ ராமர் பட ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரவான் கோவில் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.