sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு

/

குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு

குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு

குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு


ADDED : மார் 28, 2025 10:22 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் குறித்து ஆதாரங்களை தந்தால், ரொக்கப் பரிசு வழங்குவதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளான ஊஞ்சப்பாளையம் பள்ளம், செந்தில் நகர், காமராஜர் காலனி ரோடு, நொய்யல் பாலத்தின் கரைகள், ராமாச்சியம்பாளையம் பள்ளத்தில் குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்தது. இதையடுத்து, அப்பகுதிகளை சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், அங்கு எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மனோகரன் கூறுகையில், ''நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் பதிவெண்ணுடன் புகைப்படம் எடுத்து, 9629964466 என்ற எண்ணுக்கு , அனுப்புவர்களுக்கு, 500 ரூபாய் முதல், 2 ஆயிரத்து, 500 ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்க உள்ளோம். குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கவும் உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us