/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவரிடம் வழிப்பறி தொழிலாளி கைது
/
மாணவரிடம் வழிப்பறி தொழிலாளி கைது
ADDED : நவ 03, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் அருகே கல்லுாரி மாணவரிடம் தங்க கடுக்கன்களை வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குப்பேபாளையத்தைச் சேர்ந்த பிரபு மகன் யஷ்வந்த் குமார், 23. கல்லுாரி மாணவர். இவரை கடந்த 1ம் தேதி பொன்னே கவுண்டன் புதுாரில் இருந்து குப்பே பாளையம் செல்லும் வழியில், சிலர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மொபைல், தங்க கடுக்கன்கள் மற்றும் 800 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பினர்.
புகாரின் பேரில், அன்னுார் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட குன்னத்துாரைச் சேர்ந்த லேத் தொழிலாளி கோகுல், 27. என்பவரை கைது செய்து மொபைலை மீட்டனர்.