sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்

/

வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்

வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்

வரையாடுகள் பாதுகாக்க கலை நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 18, 2025 10:11 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; நீலகிரி வரையாடுகளை காப்பது குறித்து, மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அழிந்து வரும் வனவிலங்கு பட்டியலில், வரையாடு இடம் பெற்றுள்ளன. இந்த வரையாடுகளை பாதுகாக்க தமிழக அரசு, 2023ம் ஆண்டு நீலகிரி வரையாடு திட்டத்தை துவக்கியது.

இத்திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும், கலை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பகுதியாக நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த அரும்புகள் அறக்கட்டளை கலைக் குழுவினர் வரையாடுகள் பாதுகாப்பது குறித்து, பாட்டு, நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முடிவில் பொது மக்களுக்கு வரையாடுகள் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், நீலகிரி வனச்சரக அலுவலர் செந்தூர் சுந்தரேசன் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us