ADDED : செப் 25, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிரிமனல் பார் அசோசியேசன் என்ற புதிய சங்கம் துவங்கப்பட்டுள்ளது.நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி குற்றவியல் வக்கீல்கள் சார்பில், பொள்ளாச்சி கிரிமினல் பார் அசோசியேசன் என்ற புதிய சங்கம் துவங்கப்பட்டுள்ளது.
அதில், ராமராஜ் தலைவராகவும், குமாரவேல் செயலாளராகவும், துணைத்தலைவராக சுகுணாதேவி, பொருளாளராக ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக கருணை ஆனந்தன், அனிதா, அருள்செல்வன் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.