/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.53 லட்சத்தில் 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
/
ரூ.53 லட்சத்தில் 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ரூ.53 லட்சத்தில் 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ரூ.53 லட்சத்தில் 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ADDED : நவ 13, 2024 06:23 AM

வால்பாறை : வால்பாறையில், 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' அமையவுள்ளதால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், அரிய வகை வனவிலங்குகள், பறவைகளை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வால்பாறையில் சில குறிப்பிட்ட எஸ்டேட் பகுதியில் 'ஹார்ன்பில்' என்றழைக்கப்படும் இருவாச்சிப்பறவைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ், வில்லோனி, அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை வசீகரிக்கும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில், 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அட்டகட்டி அருகே, 16வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், 'ஹார்பில் வியூ பாயின்ட்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட பின், பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 'ஹார்ன்பில்' அதிக அளவில் உள்ளன. மரத்தில் கூடுகட்டி, குடும்பமாக வாழும் இந்த பறவையின் இனப்பெருக்க காலம் பிப்., முதல் மே மாதம் வரையாகும். 30 ஆண்டு முதல் 40 ஆண்டு வரை வாழக்கூடிய இந்தப்பறவை எப்போதும் இணையுடன் தான் வெளியில் செல்லும்.
வால்பாறையில், தென்மேற்குப் பருவமழையின் போது, 'ஹார்ன்பில்' உணவு தேட வெளியில் செல்ல முடியாமல் தவித்தன. வால்பாறையில் தற்போது இடையிடையே வெயில் நிலவுவதால், நீண்ட இடைவெளிக்கு பின் இப்பறவைகள், குஞ்சுடன் இறை தேடி வெளியில் செல்ல துவங்கியுள்ளன. 'ஹார்ன்பில்' பறவையை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
தென் இந்தியாவில் மேற்குமலைத்தொடர்ச்சியில் இருவாச்சிப்பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. உலக அளவில், 54 வகையான இருவாச்சிப்பறவைகள் உள்ளன. மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில் இருவாச்சிப்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இருவாச்சிப்பறவையை பொறுத்த வரை ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே இணை சேரும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குஞ்சு பொறிக்கும். அதாவது முட்டையிட்ட, 24 நாட்கள் கழித்த பின் குஞ்சு பொறிக்கும்.
ஆண் இருவாச்சி பறவையின் கண் சிகப்பு நிறத்தில் காணப்படும். இருவாச்சிப்பறவையை பொறுத்த வரை எப்போதும் இணையுடன் தான் இருக்கும். இறை தேட சென்றாலும், கூண்டில் இருந்தாலும், இணையுடனேயே இருக்கும்.
உலகின் சிறப்பு வாய்ந்த பறவைகளில் ஒன்றான இருவாச்சிப்பறவையை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கும் வகையில், மலைப்பாதையில், 16வது கொண்டை ஊசி வளைவுபகுதியில் 'ஹார்ன்பில் வியூ பாயின்ட்' அமையவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு, கூறினர்.

