sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து

/

கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து

கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து

கட்டணம் வசூலிக்க நடந்த ஏலம் ரத்து


ADDED : மே 02, 2025 09:16 PM

Google News

ADDED : மே 02, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் பேரூராட்சி வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னுார், பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான பொது ஏலம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆனது.

இதையடுத்து, கடந்த 28ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் 11 மாதத்திற்கு பணம் செலுத்தி சந்திரமோகன் என்பவர் ஏலம் எடுத்தார்.

இந்நிலையில் மறுநாள் மற்றொருவர் அதிலிருந்து 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்துவதாக கூறி, ஒரு மாதத்திற்கு இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வீதம், கணக்கிட்டு 11 மாதத்திற்கு முன் பணம் செலுத்தினார்.

இதையடுத்து, இருசக்கர வாகன ஸ்டாண்டுக்கு மறு ஏலம் நடைபெறும் என பேரூராட்சி அறிவித்துள்ளது. மறுஏலம் நடந்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கும் வரை, பேரூராட்சி ஊழியர்களே இரு சக்கர வாகன ஸ்டாண்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பார்கள் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us