ADDED : செப் 06, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜவஹர், 55.
வாடகைக்கு ஆட்டோ ஒட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு, ஜடையம்பாளையம் மார்க்கெட் அருகே, ஆட்டோவை வலது புறமாக திருப்பினார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குளானது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ஜவஹர் படுகாயம் அடைந்தர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிதாபமாக இறந்தார்.
-----
