UPDATED : ஜூலை 08, 2026 07:54 PM
ADDED : ஜூலை 08, 2026 07:22 PM
கோவை: டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தேசிய மாணவர் படை சார்பில் தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் என்.ஜி.பி.கல்வி நிறுவனங்களின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் வைத்தீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தார். தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தும் செயல்விளக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
முதல்வர் சரவணன், மாணவர் நலத்துறை இணை டீன் மோகன்குமார், 2 (டி.என்.) காம்போசிட் டெக்னிக்கல் கம்பெனியின் தேசிய மாணவர் படை இணை அலுவலர் லெப்டினன்ட் விஷ்ணு கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
