sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

/

ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்


ADDED : அக் 18, 2024 10:41 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சி) ரவீந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திட்ட ஆலோசகர் விஜய் பிரகாஷ் பேசுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எச்.ஐ.வி., பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. காச நோய்க்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள், செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us