sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் செம்மண் கொள்ளை சிறப்பு குழு ஆய்வறிக்கையில் 'பகீர்'

/

கோவையில் செம்மண் கொள்ளை சிறப்பு குழு ஆய்வறிக்கையில் 'பகீர்'

கோவையில் செம்மண் கொள்ளை சிறப்பு குழு ஆய்வறிக்கையில் 'பகீர்'

கோவையில் செம்மண் கொள்ளை சிறப்பு குழு ஆய்வறிக்கையில் 'பகீர்'


ADDED : டிச 01, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில், அனுமதியின்றி கிராவல் மண், செம்மண் வெட்டி, லோடு, லோடாக கடத்தப்பட்டன. சட்ட விரோதமாக செங்கல் சூளைகள் நடத்தப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆய்வு குழு சமர்ப்பித்த அறிக்கையை பார்க்கும் போது, வனம் மற்றும் இயற்கை வளத்துக்கு மிகப்பெரிய அழிவு நடந்திருப்பது தெரியவருகிறது. இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியவர்கள், கடமையை செய்ய தவறியுள்ளனர். உடனடியாக சரி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசின் சிறப்பு வக்கீல் பதிலறிக்கை சமர்ப்பிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. கோவை கலெக்டர் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகியோர், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதே காலகட்டத்துக்குள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

டிச., 6ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர், கோவை எஸ்.பி., ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us