/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி
/
ஏலத்தில் வாழைத்தார் விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : செப் 17, 2025 08:57 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ - 70, நேந்திரன் --- 30, கதளி மற்றும் பூவன் --- 35, ரஸ்தாளி --- 40, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மற்ற வாழைத்தார்கள் விலையில் மாற்றம் இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் வாரங்களில் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.