ADDED : டிச 17, 2025 05:17 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், கோவை சாலையில், 11 வது வார்டில், நேற்று பேரூராட்சி துப்புரவு அலுவலர் ராஜ்குமார், மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் அலுவலர்கள், ஹோட்டல், பேக்கரி, மளிகை, பேன்சி கடைகளில் சோதனை நடத்தினர்.
25 கடைகளில் நடத் தப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட 6.5 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன. 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 'இரண்டாவது முறையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பிடிபட்டால் அபராதம் இரட்டிப்பாகும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
