sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி  

/

சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி  

சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி  

சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி  


ADDED : அக் 21, 2024 06:50 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : அண்ணா நகர் மேடு முதல் ஆச்சிபட்டி வரையிலான சாலையில், பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் செய்து சீரமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிய வழித்தடம், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியே, தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இருப்பினும், அண்ணாநகர் மேடு முதல், ஆச்சிப்பட்டி வரையிலான சாலை, மிகவும் மோசமாகவே உள்ளது. ஏற்கனவே, இந்த சாலை, மேடு பள்ளமாக இருப்பதால், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வந்தன.

இச்சூழலில், சமீபத்தில் பெய்த கனமழையால், சாலையில் பெரும் பள்ளங்கள் உருவாகின. வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி, விரைந்து சீரமைக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த சாலையில், தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் செய்து, சீரமைக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'இந்த சாலை, போதிய பராமரிப்பின்றி பல இடங்களில் சிதைந்து, குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டுநர்களை பாதிப்பு அடையச் செய்கிறது. முழுமையாக சாலையை புதுப்பிக்க வேண்டும். சாலையில், 'யு டேர்ன்' பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us