/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலையில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
/
பல்கலையில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
ADDED : செப் 17, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பேராசிரியர்கள், ஊழியர் களின் பணிகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்கலைகள், அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த உத்தரவிட்டது. கோவை பாரதியார் பல்கலையில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பேராசிரியர்கள், ஊழியர்கள் வருகைப்பதிவை முறைப்படுத்த, 45 மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக கூடுதல் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன' என்றார்.