/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவை காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்
/
பறவை காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜன 20, 2026 07:06 AM

பொள்ளாச்சி: கேரளா மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் கடந்த வாரம் பறவை காய்ச்சல் நோயால், வாத்துகள் இறந்துள்ளன.இதைத் தொடர்ந்து, தமிழக - கேரளா எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடுப்புணி, கோபாலாபுரம் சோதனைச் சாவடியில், கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணியை கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு ஆய்வு செய்தார்.
பணிகள் முறையாக நடைபெறுகிறதா என பார்வையிட்ட உதவி இயக்குனர், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருந்து தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

