sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திசை மாறிய பறவைகள்! வலசை வரும் பறவைகள் மாயம்; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

/

திசை மாறிய பறவைகள்! வலசை வரும் பறவைகள் மாயம்; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

திசை மாறிய பறவைகள்! வலசை வரும் பறவைகள் மாயம்; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

திசை மாறிய பறவைகள்! வலசை வரும் பறவைகள் மாயம்; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

2


ADDED : ஜன 30, 2025 07:43 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:43 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவைக்கு வலசை வரும் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை, குறைந்துள்ளதாக இந்த ஆண்டின் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பறவைகளை ஈர்க்க, குளங்களின் சூழலை மேம்படுத்த, சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'கோயம்புத்துார் நேச்சர் சொசைட்டி' கடந்த, 12 ஆண்டுகளாக ஆசிய வாட்டர் பேர்டு கணக்கெடுப்புக்காக, கோவையில் உள்ள குளங்களில், நீர் பறவைகளின் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தின் முக்கிய குளங்களில், 33 பேர் கொண்ட தன்னார்வலர் குழுவினர் ஆய்வு செய்து, பறவை இனங்கள் மற்றும் பறவைகளின் மொத்த எண்ணிக்கையை, பதிவு செய்துள்ளனர்.

கடந்த, 12 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஆண்டும் பறவைகளின் எண்ணிக்கையும், பறவை இனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, கோயம்புத்துார் நேச்சர் சொசைட்டி நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் கூறியதாவது:

கோவையில் உள்ள குளங்களில், கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடத்திய போது, 201 வகை பறவை இனங்களையும், மொத்த எண்ணிக்கையில், 16 ஆயிரத்து 69 பறவைகளையும் பார்த்து பதிவு செய்திருக்கிறோம்.

ஆனால் இந்த ஆண்டு, 149 வகை பறவை இனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. மொத்தம் 9119 பறவைகள்தான் உள்ளன. இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

இங்கு வலசை வரும் பறவைகளில், 2017ம் ஆண்டில், 20 வகையான பறவைகளை பார்க்க முடிந்தது. இப்போது, 12 வகை மட்டும்தான் வந்துள்ளன. மொத்த பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

துார்வாரி ஆழமாக்கப்பட்ட பிறகு, அதிக மழைப் பொழிவு காரணமாக குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. பல பறவைகளால் நீந்தி, இரை தேட முடியாது. கால் ஊன்றும் அளவில் தண்ணீர் இருக்க வேண்டும்.

குளக்கரைகளில் பறவைகள் ஓய்வெடுக்க மரங்கள் குறைவாகவே உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரத்தை ஒட்டி உள்ள குளங்கள், பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிந்தபடி உள்ளன.

இது, இரவாடி பறவைகளுக்கு தொந்தரவாக உள்ளது. இவை எல்லாம் வலசை வரும் பறவைகள் குறைய, முக்கிய காரணங்களாக உள்ளன.

இதைத் தவிர, கோவை குளங்களில் கழிவுநீர் அதிக அளவில் கலக்கிறது. அதை தடுக்க வேண்டும். குளங்கள் நடுவில் இருந்த தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. கரையில் மரங்கள், நாணல் போன்ற தாவரங்கள் இல்லை.

மீனவர்கள் அதிகம் மீன்கள் பிடிப்பதால், பறவைகளுக்கு இரை கிடைப்பது குறைந்து விட்டது. கோவை நகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதனால், சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

பறவைகள் வலசை வருவதை அதிகரிக்க ஈரநில மேலாண்மையும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்க கூட்டு நடவடிக்கையும் தேவை. பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய வாழ்விடங்களாக, கோவையில் உள்ள குளங்களை மாற்ற வேண்டும். இதன் வாயிலாக, மீண்டும் பறவைகள் தேடி வரும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us