/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர்வெல் லாரிகள் வேலை நிறுத்தம்
/
போர்வெல் லாரிகள் வேலை நிறுத்தம்
ADDED : ஜன 08, 2026 05:14 AM

கோவில்பாளையம்: போர்வெல் லாரி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில், அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில், 130 போர்வெல் லாரிகள் இயங்கி வருகின்றன.
கோயம்புத்தூர் ரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், போர்வெல் போட தேவையான, பிட் மற்றும் உதிரி பாகங்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் போர்வெல் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போர்வெல் அமைக்க தேவையான முக்கிய பொருளான பிட் 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. எனவே, 12ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றனர்.
வேலை நிறுத்தம் காரணமாக, விவசாய தோட்டங்களில், போர்வெல் அமைப்பது, 'லே-அவுட்' தொழிற்சாலை ஆகியவற்றில் போர்வெல் அமைக்கும் பணிகள் ஸ்தம்பித் துள்ளன.

