/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
/
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் மார்பக பரிசோதனை முகாம்
ADDED : அக் 13, 2024 11:52 PM
கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம், வரும் 31ம் தேதி நடக்கிறது.
கே.எம்.சி.எச்., மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா, டாக்டர் பிரேமா ஆகியோர் கூறியதாவது:
பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பகங்களில் வலி, கட்டி, அக்குள்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
அறிகுறிகள் இல்லை என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். மேலும், பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட, மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.
இதில், மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களைக் கூட, முன்கூட்டியே கண்டறியலாம். இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் கட்டிகளில் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் அல்லாத சாதாரண கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீதம் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை தற்போது உள்ளது. இதற்கான அனைத்து வசதிகளுடன் சர்வதேச தரத்திலான மார்பக பரிசோதனை மையம், கே.எம்.சி.எச்.,ல் அமைந்துள்ளது. வித்தியாசத்தை துல்லியமாக பார்க்க உதவும் முப்பரிமாண வசதியுடன் கூடிய மேமோகிராம் பரிசோதனை கருவி, அல்ட்ராசோனோகிராபி இயந்திரம், 3டி எம்.ஆர்.ஐ., வேக்குவம் அசிஸ்டட் பயாப்சி ஆகியவையும் இங்குள்ளன.
உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கே.எம்.சி. எச்.,ல் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் வரும் 31ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், ரூ.3,750 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1,200க்கும், ரூ.1,200 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.600க்கும் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது; ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 98940 08800, 0422 432 4151 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.