/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : நவ 07, 2024 08:17 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், வீட்டுக்குள் இருந்த நகை ஆகியவற்றை திருடி சென்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் கண்மணி, 46. இவர், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கடந்த, 30ம் தேதி வெளியூர் சென்றார். கடந்த, 3ம் தேதி மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்தது. வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கம்மல், பிரெஸ்லெட், மோதிரம், டாலர் உள்ளிட்ட நான்கு பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தன. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.