sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி

/

நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி

நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி

நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி


ADDED : மே 08, 2025 12:35 AM

Google News

ADDED : மே 08, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கோவை-அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் மேம்பாலம் உள்ளது. கோவை நோக்கி செல்லும் பஸ்களும், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக நால் ரோட்டுக்கு வந்து செல்கின்றன. அங்கு காத்திருக்கும் பயணிகள் பஸ்சில் ஏறி செல்வர்.

சர்வீஸ் ரோடுகளில் இரு புறமும் நிழல்கூரைகள் இல்லாததால், பயணிகள் வெயிலில் காய்ந்து மழையில் நனையும் நிலை உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: கருமத்தம்பட்டி நால் ரோட்டில் நிழல்கூரை இல்லாததால், வெயில் மற்றும் மழையின் போது நிற்க இடமில்லாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. அருகில் உள்ள கடைகளில் போய் நிற்க வேண்டியுள்ளது.

முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் படாத படுகின்றனர். கத்திரி வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேம்பாலம் கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை நால் ரோட்டில் நிழல்கூரை அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us