/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கார் பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட்: அவதிக்குள்ளாகும் பயணியர்
/
'கார் பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட்: அவதிக்குள்ளாகும் பயணியர்
'கார் பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட்: அவதிக்குள்ளாகும் பயணியர்
'கார் பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட்: அவதிக்குள்ளாகும் பயணியர்
ADDED : ஆக 31, 2025 11:17 PM

வால்பாறை; புதிய பஸ் ஸ்டாண்ட் கார் பார்க்கிங் இடமாக மாறி வருவதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில் நல்லகாத்து பாலம் அருகில், கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆனால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே, நகர் பகுதியை விட்டு துாரத்தில் இருப்பதாக கூறி, காந்திசிலை வளாகத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றினர்.
இதனையடுத்து, வெளியூர் செல்லும் பஸ்கள் மட்டும் இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகின்றன. எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனிடையே, பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமரும் வகையில், இருக்கை, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால், பஸ் ஸ்டாண்டினுள் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
வால்பாறையில், தற்போது மழை பெய்யும் நிலையில், பஸ் ஸ்டாண்ட்டில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், வெளியூர் செல்லும் பயணியர் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து, பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
இதனிடையே, சமீப காலமாக பஸ் ஸ்டாண்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருவதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட், தாழ்வான பகுதியில் இருப்பதால், மழை காலத்தில் நீர் தேங்கி பயணியர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயிலில் பஸ்சை நிறுத்தி, வெளியூர் செல்லும் பயணியரை ஏற்றி செல்கின்றனர். பயணியர் வசதிக்காக போதிய அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.