sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்

/

 ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்

 ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்

 ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்


ADDED : நவ 27, 2025 04:49 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை, பைபாஸ் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் நகருக்குள் வருவதற்கு, பிரதான வழித்தடமாக, சாதிக்பாட்சா பைபாஸ் ரோடு உள்ளது.

ஒரு வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், அரசு போக்குவரத்துக்கழக பணி மனை முதல் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆக்கிரமிப்புகள் அதிகளவு காணப்படுகிறது.

இந்த ரோட்டிலுள்ள கட்டடங்கள், உள்ளூர் திட்ட குழும விதிமுறை மீறி, வாகன நிறுத்தும் இடம், பக்க திறவிடம் உள்ளிட்ட எந்த வழிமுறையும் பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ளதோடு, ரோட்டை ஆக்கிரமித்தும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விளம்பர தட்டிகள், பலகைகளையும் ரோட்டிலேயே வைத்துள்ளனர். கடைகள், வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்படுவதால், பெரும்பகுதி ரோடு மாயமாகியுள்ளது. அதே போல், இரவு நேரங்களில் ரோடு முழுவதும் தாறுமாறாக, ஏராளமான ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது.

ஆம்னி பஸ்களை, பஸ் ஸ்டாண்டிற்குள் கிழபுறம் காலியாக உள்ள இடத்தில் நிறுத்த, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும், வழக்கம் போல் பைபாஸ் ரோட்டிலேயே ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

மேலும், அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திக்கும் பகுதியிலுள்ள, அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பைபாஸ் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், பிரதான ரோடுகளில் வாகனங்கள் நிறுத்துவதை கண்காணிக்கவும் வேண்டும்.






      Dinamalar
      Follow us